
செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் பகுதியில் 13 வயது சிறுமி தனது தாய் தந்தையுடன் வசித்து வருகிறார். இவர்களது வீட்டிற்கு ஒரு வாலிபர் தண்ணீர் கேன் போடுவதற்காக சென்றுள்ளார். அப்போது சிறுமியிடம் பழகி காதலிப்பதாக நடித்து அந்த வாலிபர் பலமுறை சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து அவருக்கு தெரியாமலேயே வீடியோ எடுத்துள்ளார்.
அந்த வீடியோவை தனது நண்பர்களுடன் சேர்ந்து ரசித்து வந்தார். அதே வீடியோவை காட்டி 7 சிறுவர்களும் 5 வாலிபர்களும் இணைந்து அவ்வபோது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்தனர். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்தனர்.
பரிசோதனை முடிவில் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 7 சிறுவர்கள் தாம்பரத்தைச் சேர்ந்த சஞ்சய்(19), நந்தகுமார்(18) எஸ் சஞ்சய்(18) சூர்யா, நிக்ஸன் உள்ளிட்ட 12 பேர கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
கைது செய்யப்பட்ட ஏழு சிறுவர்கள் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர். மீதமுள்ள ஐந்து பேரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.