காட்டு வாழ்வில் வேட்டையாடும் விலங்குகளுக்கும், இரையாகும் விலங்குகளுக்கும் இடையே நடைபெறும் உயிர் மீட்சி போராட்டங்கள் பல்வேறு அரிய தருணங்களை உருவாக்குகின்றன. இதற்கான ஒரு அசாதாரண காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது போன்ற வனவிலங்கு காட்சிகள் பெரும்பாலும் காட்டில், ஆறுகள் மற்றும் நீர்நிலைகளின் அருகே நிகழ்கின்றன. நிலத்தில் சிங்கம், புலி போன்றவை வேட்டையாடும் விலங்குகள் ஆக இருந்தால், தண்ணீரில் முதலைகள்தான் ஆபத்தான வேட்டையாடிகளாக காணப்படுகின்றன. வேட்டையாடும் திறனில் முன்னணியில் உள்ள இவ்விலங்குகள், சில சமயங்களில் எதிர்பாராத சவால்களை எதிர்கொள்கின்றன.

அதேபோல், தற்போது இணையத்தில் பரவியுள்ள ஒரு வீடியோவில், யானை ஒன்று தண்ணீர் குடிக்க அருகே சென்றபோது, தண்ணீருக்குள் பதுங்கி இருந்த முதலை ஒன்று திடீரென அதன் தும்பிக்கையைப் பிடிக்க முயற்சிக்கும் அதிர்ச்சிகரமான காட்சி பதிவாகியுள்ளது.

 

வீடியோவில், யானை தனது கூட்டத்துடன் ஆற்றங்கரையில் நின்றிருக்கும் போது, தண்ணீரில் ஏற்பட்ட சலசலப்புடன் முதலை மேலெழும்பி அதன் தும்பிக்கையைப் பிடிக்கிறது. அந்த யானை பதற்றமடைந்து தும்பிக்கையை வலுவாக ஆட்டி தன்னை விடுவிக்க முயற்சிக்கிறது. முதலில் முதலையின் பிடியில் சிக்கிக் கொண்டாலும், அதன் பின் தனது வலிமையால் தன்னை மீட்டு, தனது காலால் அடித்துத் துரத்தி முதலையை பரிதாபமான நிலைக்கு தள்ளுகிறது. முதலை உயிரிழந்து விடுகிறது.

இந்த வீடியோவில், யானையின் தைரியம் மற்றும் அந்த தருணத்தில் எடுத்த முடிவுகளும் வியப்பை ஏற்படுத்துகின்றன. இவ்வாறு வனத்திலே நொடிகள் மட்டுமே தீர்மானிக்கும் போராட்டங்களில், இந்த யானை தனது உயிரை காப்பாற்றி வெளியேறியது என்பது அனைவரையும் வியக்கவைக்கும் தருணமாக அமைந்துள்ளது.

இந்தக் காணொளியை ஒரு எக்ஸ் பயனர் பதிவிட்டுள்ளார். வெறும் 16 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ இதுவரை 2.72 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகள் பெற்றுள்ளதுடன், பலரும் இதைப் விருப்பம் தெரிவித்து பகிர்ந்து வருகிறார்கள்.