கோவை சூலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் பிரசாரம் செய்யச் சென்ற அண்ணாமலையை அதிமுகவினர் தடுத்து நிறுத்தியதால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அரசியல் கட்சியினர் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள். ஒருவரையொருவர் மாறிமாறி விமர்சனமும் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் தாமதமாக வந்த அண்ணாமலை பிரசாரம் செய்ய முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதிமுகவினர் போராட்டத்தில் குதித்ததையடுத்து போலீசார் அண்ணாமலையை திரும்பிப் போகச் செய்தனர்.