
இந்தியாவில் நடப்பு நிதியாண்டுக்கான தங்க பத்திர விற்பனையை மத்திய அரசு அறிவித்துள்ளது. வணிக வங்கிகள், தபால் நிலையங்கள் மற்றும் தேசிய பங்குச் சந்தை மூலமாக தங்க பத்திரம் விற்பனை செய்யப்படும். இதில் தனிநபர் குறைந்தபட்சம் ஒரு கிராம் தங்கம் முதல் 4 கிலோ தங்கம் வரை முதலீடு செய்ய முடியும். தற்போது ஒரு கிராம் 5 ஆயிரத்து 926 ரூபாய் ஆகும். இந்த திட்டத்தில் ஒரு வருடத்திற்கு இரண்டு புள்ளி ஐந்து சதவீதம் வட்டி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தங்க பத்திரத்தில் முதலீடு செய்வதால் நன்மை என்னவென்றால் தங்கத்தின் விலை வீழ்ந்தாலும் அதிகரித்தாலும் முதலில் தீர்க்க உத்தரவாதம் வழங்கப்படும். அதே சமயம் மூன்று ஆண்டுகள் இறையாண்மை தங்க பத்திரங்களை வைத்திருந்தால் அதன் மூலதன ஆதாய வரியிலிருந்து நீங்கள் விளக்கு பெற்றுக் கொள்ளலாம். அடுத்ததாக இறையாண்மை தங்க பத்திரங்கள் மீது வருமான வரி சட்டத்தின்படி வரி எதுவும் விதிக்கப்படாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.