பிதாமகன் படத்தில் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் கஞ்சா கருப்பு. அதனைத் தொடர்ந்து சிவகாசி, சண்டக்கோழி, தாமிரபரணி உள்ளிட்ட பல முன்னணி படங்களில் நடித்து பிரபலமானார் காமெடி நடிகர் கஞ்சா கருப்பு. இவர் சமீபத்தில் கலந்து கொண்ட பேட்டி ஒன்றில் ,இவரிடம் ஒரு காமெடி நடிகர் எவ்வளவு பணம் வந்தாலும் மற்றவர்களுக்கு கொடுக்கமாட்டார். சக நடிகர்களுக்கு ஒரு பிரச்சனை வந்தால் கூட உதவ மாட்டார் என்று ஒருவரை கூறுகிறார்கள்.

அது குறித்து உங்களுடைய கருத்து என்ன? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், நீங்கள் வடிவேலுவை தான் சொல்கிறீர்கள்.  அவர் யாருக்கும் எப்போதுமே எதுவும் கொடுக்க மாட்டார். ரொம்ப நல்லவருங்க அவரு. யாருக்கும் கொடுக்காததால் தான் நன்றாக இருக்கிறார். நம்ம கொடுத்ததால் தான் கெட்டுப் போயிருக்கிறோம். யாருக்கும் ஒரு ரூபா கொடுக்க மாட்டார். டீ சாப்பிட்ட இடத்தில் கூட பத்து பைசா கொடுக்க மாட்டார். அதனால் தான் அவர் நல்லா இருக்காரு என்று பேசி இருக்கிறார்.