தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சிவாஜி மற்றும் ரஜினிகாந்தின் படங்களில் நடித்து ஒரு கட்டத்தில் அவர்களுக்கே ஜோடியாக அளவிற்கு வளர்ந்தவர் தான் நடிகை மீனா. இவர் சினிமாவில் உச்சத்தில் இருந்தபோது 2009 ஆம் வருடம் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும் இருக்கிறார். இப்படி திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வந்த மீனாவிற்கு இடையில் எதிர்பாராத ஒரு பெரிய இழப்பு நேர்ந்தது. தன்னுடைய கணவரை விசித்திரமான நுரையீரல் நோய் ஒன்றால் இழந்தார் மீனா.

இந்த நிலையில் இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் , கணவர் இறந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகும் நிலையில், அவரது மறைவை என்னால் ஈடு செய்ய முடியவில்லை. ஒரு நடிகை தனியாக இருந்தாலே பல வதந்திகள் தொடர்ந்து வரும். அந்த மாதிரியான வதந்திகள் என்னையும் என்னுடைய குடும்பத்தையும் பாதித்தது. தற்போது வரை மறுமணம் குறித்து யோசிக்கவில்லை. எனக்கு மகள் இருக்கும் சூழலில் மறுமணம் என்பது அவரையும் சார்ந்தது தான் என்று கூறியுள்ளார்.