கடந்த இரண்டு வருடங்களாக கொரானா தொற்று காரணமாக டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் குறித்த அறிவிப்பு எதுவும் அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த வகையில் டி.என்.பி.எஸ்.சி குரூப் 3 தேர்வானது ஜனவரி 28-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்டுள்ளது. இதனை தேர்வர்கள் https://tnpsc.gov.in, www.tnpscexams.in தங்களின் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விண்ணப்ப எண், பிறந்த தேதி போன்றவற்றை உள்ளீடு செய்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என கூறபட்டுள்ளது.