சென்னை மாவட்டம் தாம்பரத்தை சேர்ந்தவர்கள் பாலாஜி(42)- மகேஸ்வரி(39) தம்பதியினர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. குழந்தை சிறப்பு குழந்தை என்பதால் குழந்தையை தினமும் பெருங்களத்தூர் பகுதியில் உள்ள கையெழுத்து பயிற்சி நிலையத்திற்கு மகேஸ்வரி அழைத்துச் சென்று திரும்பி அழைத்து வருவது வழக்கம்.

நேற்று வழக்கம் போல டியூஷன் சென்டர் கிளம்பிய  மகேஸ்வரி வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார். ஆனால் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மகேஸ்வரி வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 40 பவுன் நகை மற்றும் ரூபாய் 1 1/2 லட்சம் காணாமல் போயிருந்தது.

இதுகுறித்து மகேஸ்வரி உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வாகன எண்ணை வைத்து வீட்டில் கொள்ளையடித்த நபர் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பிரபாகரன்(42) என்பதை கண்டுபிடித்தனர்.

அவரை பிடிப்பதற்காக போலீசார் தனிப்படை அமைத்து பிரபாகரனை கைது செய்தனர். பின்பு கைது செய்த பிரபாகனிடம் விசாரித்தில் இதற்கு முன்பே ஒரு வீட்டில் 7 பவுன் நகையை திருடி அதனை விற்று இரு சக்கர வாகனம் வாங்கியது தெரியவந்தது. தற்போது மகேஸ்வரியின் வீட்டில் திருடிய நகைகளையும் ஒரு அடகு கடையில் அடகு வைத்ததாகவும் அந்த பணத்தை தனக்கு கடன் கொடுத்தவர்களிடம் கொடுத்து விட்டதாகவும் பிரபாகரன் கூறினார்.

மேலும் கடந்த பத்து வருடங்களாக பிரபாகரன் தொடர்ந்து திருட்டில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது. அந்த பணத்தை வைத்து பிரபாகரன் ஒரு கிரவுண்ட் இடம் வாங்கி அங்கு வீடு கட்டி வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது. அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.