மேட்டுப்பாளையம் உதகை இடையே இயக்கப்பட்டு வரும் நீலகிரி மலை ரயில் சேவை டிசம்பர் 13ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. மழை காரணமாக ஏற்கனவே டிசம்பர் 8 முதல் டிசம்பர் 10ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது டிசம்பர் 13ஆம் தேதி வரை மலை ரயில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை வலுப்பெற்று வரும் நிலையில் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ரயில் தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டதுடன் பாறைகள் மற்றும் மரங்கள் அவ்வப்போது விழுந்த வண்ணம் உள்ளன. இதனால் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.