தமிழகத்தில் சமீபத்தில் புயலின் கோர தாண்டவத்தால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு நிவாரண உதவிகளை வழங்கி வரும் நிலையில் வெள்ளத்தில் மூழ்கிய வாகனங்களை பழுது பார்க்க தமிழக அரசு சார்பில் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த Toll free எண்களை பயன்படுத்தி வாகனங்களை பழுது பார்க்க முன்பதிவு செய்து கொள்ளலாம் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.