காச்சிகுடா மற்றும் செகந்திராபாத்தில் இருந்து கொல்லத்துக்கு டிசம்பர் 11ஆம் தேதி முதல் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி காச்சிகுடாவிலிருந்து டிசம்பர் 11ஆம் தேதி இரவு 11.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் டிசம்பர் 13ஆம் தேதி காலை 5.30 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

பின்னர் மறு மார்க்கமாக இந்த ரயில் கொல்லத்திலிருந்து டிசம்பர் 13ஆம் தேதி காலை 10.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 3.45 மணிக்கு காட்சிகூட சென்றடையும். அதனைப் போலவே செகந்திராபாத்தில் இருந்தும் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில்களுக்கான முன்பதிவு டிசம்பர் 9ஆம் தேதி இன்று காலை 8 மணி முதல் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது