பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் தனது குடும்பத்துடன் கடந்த 28 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகிறார். அவரது 15 வயது முதல் அடிக்கடி டிக் டாக் செயலியில் வீடியோக்களை பதிவிட்டு வந்தார். ஆனால் அந்த சிறுமியின் தந்தை வீடியோ பதிவிடுவதை நிறுத்துமாறு தனது மகளை கண்டித்தார்.

ஆனாலும் சிறுமி தனது தந்தையின் பேச்சைக் கேட்காமல் டிக் டாக்கில் வீடியோ பதிவிட்டார். இதனால் கோபமடைந்த அவர் தனது மகளை கொலை செய்ய திட்டமிட்டார். இதனால் குடும்பத்துடன் பாகிஸ்தானுக்கு வந்தார். அதன் பிறகு கோபத்தில் மகளை சுட்டு கொலை செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சிறுமியின் தந்தையை கைது செய்தனர்.