ஒவ்வொரு வருடமும் குடியரசு தின விழாவின் போது சிறப்பாக பணியாற்றி அதிகாரிகள், ஊழியர்களுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் சார்பாக துறைவாரியாக பாராட்டு சான்று மற்றும் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் குடியரசு தின விழாவை முன்னிட்டு கரூரில் டாஸ்மாக்கில் அதிக வருவாய் ஈட்டி கொடுத்து சிறப்பாக பணியாற்றிய 4 ஊ ஊழியர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் இந்த விருதுகளை வழங்கிய செய்தி சோசியல் மீடியாவில் வைரலாக பரவி, பல தரப்பினராலும் விமர்சிக்கப்பட்டது. இதனால் கொடுத்த விருதை திரும்ப பெற்ற ஆட்சியர், இந்த துறை ஊழியர்களுக்கு விருது கொடுத்தது விமர்சிக்கப்பட்டது எதிர்பார்க்காதது என்றார்.