2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சியும் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஆனால் தொகுதி பங்கீடு பற்றி இதுவரை உடன்பாடு எட்டப்படவில்லை. நேரடியாக இதுவரை இரண்டு கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இரண்டு தொகுதிகளை கேட்டு வருவதாகவும் ஒரு தொகுதியை மட்டுமே தர முன்வரும் திமுக உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என நிபந்தனை விதித்து வருவதாகவும் கூறப்படுகின்றது. அதனைப் போலவே மக்கள் நீதி மய்யம்  போட்டியிடும் தொகுதியில் அவர்களுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கிய டார்ச் லைட் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என கூறி வருவதால் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது.