இந்தியாவில் மக்கள் பலரும் ஓலா மற்றும் ஊபர் உள்ளிட்ட டாக்ஸிகளை அதிக அளவு பயன்படுத்துகின்றனர். நாளுக்கு நாள் இதில் பயணிப்பவரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கர்நாடக மாநில அரசு ஓலா மற்றும் ஊபர் டாக்சி களுக்கான கட்டணத்தை எதிரடியாக உயர்த்தியுள்ளது. அதாவது வாகனங்களின் விலையின் அடிப்படையில் மூன்று பிரிவுகளாக கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இரவு நேர பயணத்திற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். இது புதிய கட்டண நடைமுறை உடனடியாக அமலுக்கு வரும் என்றும் கர்நாடக மாநில அரசு தெரிவித்துள்ளது. ஒரே மாதிரியான கட்டண முறையை மாநிலம் முழுவதும் அமல்படுத்துவதற்காக இந்த கட்டண உயர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு விளக்கமளித்துள்ளது.