இந்தியாவின் மிகப்பெரிய நெட்வொர்க் நிறுவனமான ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய ரீசார்ஜ் திட்டங்களை அடிக்கடி அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு இரண்டு புதிய பிரிபெய்டு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டங்களின் படி 349 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் தினமும் 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள் 30 நாட்களுக்கு கிடைக்கும். மேலும் 899 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் தினமும் 2.5 ஜிபி டேட்டா 90 நாட்களுக்கு வழங்கப்படும். இந்த திட்டங்களுடன் ஜியோ சினிமா,ஜியோ டிவி மற்றும் ஜியோ செக்யூரிட்டி உள்ளிட்ட பல சேவைகளும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.