தமிழர் திருநாள் பொங்கலை முன்னிட்டு தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதில் முக்கியமாக மதுரையில் அவனியாபுரம்,பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலக பிரசித்தி பெற்றதாகும். அதில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி வருகின்ற ஜனவரி 15ஆம் தேதி நடைபெற உள்ளது.

அப்படி இந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு பாலமேடு, அவனியாபுரம், அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் 15,16,17 தேதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற இருக்கிறது. இந்த நாட்களில் அப்பகுதிகளில் இருக்கும் அனைத்து மதுக்கடைகளுக்கும் விடுமுறை அளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.