சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை சரிசெய்ய தமிழக அரசு மத்திய அரசிடம் நிதி கேட்டிருந்தது. ஆனால் அவர்கள் நிவாரண நிதி ஏதும் வழங்கவில்லை என்று ஆளுங்கட்சியினர் குற்றம் சாட்டியிருந்தனர். இதனை கண்டித்து ஜனவரி 8ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.