கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்த ஹரி பிரசாத் என்பவர் வீட்டில் சட்டத்திற்கு விரோதமாக அரக்கு காய்ச்சப்படுவதாக சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து ஹரிபிரசாத் வீட்டில் சோதனை மேற்கொள்ள அதிகாரிகள் சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்தவர்கள் அதிகாரிகளை தாக்கியதோடு வீட்டில் வளர்க்கும் நாயையும் கட்டவிழ்த்து விட்டு கடிக்க விட்டுள்ளார்.

இந்த பதட்டமான சூழலை பயன்படுத்திய ஹரி பிரசாத் வீட்டில் இருந்து தப்பி ஓடி விட்டார். இதனை அடுத்து அதே இடத்தில் இருந்த ஹரி பிரசாத் நண்பர்கள் வினித், கண்ணன், அமல் உள்ளிட்டரை கைது செய்துள்ளனர்.