பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு படையினர் பணியில் இருந்துள்ளனர். அப்போது பாகிஸ்தானில் இருந்து ட்ரோன் ஒன்று இந்திய எல்லைக்குள் நுழைந்ததை பார்த்தபோது அது அங்கிருந்த வயல்வெளியில் விழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினரும் பஞ்சாப் காவல்துறையினரும் ட்ரோன் விழுந்த இடத்தில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது உடைந்த நிலையில் ட்ரோன் கண்டுபிடிக்கப்பட்டது. இதுபோன்ற ட்ரோன் மூலமாக இந்தியா – பாகிஸ்தான் எல்லை வழியே போதைப்பொருள் கடத்துவதாகவும் இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பாதுகாப்பு படையினர் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.