தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாள்களே இருக்கும் நிலையில் தேசியக் கட்சிகளான காங்கிரஸ் & பாஜகவின் தலைவர்கள் தமிழகம் நோக்கி படையெடுத்து வரத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில், பாஜக மூத்த தலைவர் அமித்ஷா பண்டைய பாண்டிய தலைநகரான மதுரையிலும், காங்கிரஸின் ராகுல் காந்தி சேர நிலமான கோவையிலும் இன்று மாலை தேர்தல் பரப்புரையில் ஈடுபடவுள்ளனர். ஜனநாயகப் போரில் யார் வெல்வார்கள் என ஜுன் 4ஆம் தேதி தெரியும்.