பத்தாண்டு காலம் ஆட்சி செய்த பாஜக படுதோல்வி அடைந்ததாக முதல்வர் ஸ்டாலின் சாடியுள்ளார். மக்களவைத் தேர்தலில் முக்கிய பிரச்னைகள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வை சுட்டிக்காட்டிய அவர், பாஜக ஆட்சியின் முடிவுக்கான ‘கவுண்ட் டவுன்’ தொடங்கிவிட்டது. சிலரை சில காலம் ஏமாற்றலாம்; எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது. அன்றாட வாழ்வாதார பிரச்னைகளை தீர்ப்பதில் பாஜக தோல்வி அடைந்ததை மக்களே உணர்ந்துள்ளனர் என கூறியுள்ளார்.