தேசிய ஓய்வூதிய அமைப்பானது முதியோர்களுக்கு கடைசி காலத்தில் நல்ல வருமானத்தை கொடுக்கும் விதமாக பல சிறப்பான பலன்களை வழங்கி வருகிறது .ஆரம்பத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்காகவே தொடங்கப்பட்ட இந்த திட்டம் தற்பொழுது தனியார் மற்றும் அமைப்புசாரா துறைகளை சேர்ந்த ஊழியர்களுக்காகவும் இயங்கி வருகிறது. மூத்த குடிமக்களுடைய வயது மற்றும் ஓய்வூதிய வயது அடிப்படையில் தேசிய ஓய்வூதிய அமைப்பு திட்டத்திற்கான பலன் வழங்கப்படுகிறது.

தற்போது இந்த  ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் வழங்கப்படுத்தப்பட்ட முயற்சி என்பதால்   சந்தாதார்களின்  பணம் எப்பொழுதும் பாதுகாப்பாக இருக்கும். குறிப்பாக இதில் வரி விதிக்கப்படவில்லை. இந்த திட்டத்தின் கீழ் நிதி நிலை பொறுத்து எந்த நேரத்திலும் நாம் விரும்பிய தொகையை சேமிக்க முடியும். அதே நேரத்தில் எந்த நேரத்திலும் பங்களிப்பை அதிகரிக்கவும் குறைக்கவும் முடியும்.