இந்தியாவில் வங்கி கணக்குகளை விட மக்கள் பலரும் அதிக அளவு தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் இணைய ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் வாடிக்கையாளர்களுக்கு சேமிப்பு திட்டங்களில் கூடுதல் வட்டி வழங்கப்படுகிறது. அதன்படி தற்போது இரட்டிப்பு லாபம் தரக்கூடிய போஸ்ட் ஆபீஸ் கிசான் விகாஸ் பத்ரா திட்டம் குறித்து அறிந்து கொள்ளலாம்.

இந்த திட்டத்தின் கீழ் முதலீட்டாளர்களுக்கு 7.5% வட்டி வழங்கப்படும் நிலையில் உங்களால் இயன்ற தொகையை இதில் முதலீடு செய்யலாம். நீங்கள் முதலீடு செய்த தொகை 115 மாதங்களில் அப்படியே இரட்டிப்பாக உங்களுக்கு கிடைக்கும். அதாவது நீங்கள் 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் 20 லட்சம் ரூபாய் ஆக பெறலாம். இந்த திட்டத்தில் இணைய விருப்பமுள்ளவர்கள் உடனடியாக அருகில் உள்ள போஸ்ட் ஆபீசுக்கு சென்று உங்களிடம் உள்ள பணத்தை முதலீடு செய்து லாபம் பெறுங்கள்.