இன்றைய காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு என்பது மக்கள் மத்தியில் அதிகரித்து விட்ட நிலையில் அதனால் பல விபத்துக்கள் நடைபெறுகின்றன. பெரும்பாலும் சாலையில் செல்லும் போது செல்போன் பேசிக் கொண்டும் செல்போன் பார்த்தபடியும் செல்வதால் விபத்துக்கள் நடைபெறுகிறது. நாள்தோறும் ஆங்காங்கே செல்போனால் பல விபத்துகளும் அசம்பாவிதங்களும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

அதுபோல நீலகிரி மாவட்டம் குன்னூரில் ஒரு விபத்து நடந்துள்ளது. செல்போன் பார்த்தபடி அஜாக்கிரதையாக பெண் ஒருவர் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் அந்த பெண் மீது வேகமாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக அந்த பெண் சிறிய காயங்களுடன் உயிர்த்தப்பினார். இந்த காட்சியை அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் தற்போது அந்த காட்சி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.