
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் சஜன் (37) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் பேருந்தில் நடத்துனராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று காலை வழக்கம் போல் வேலைக்கு சென்ற நிலையில் அவர் சென்ற பேருந்து இரிஞ்சிலாக்குடா பேருந்து நிறுத்தம் அருகே நின்றது. அப்போது பள்ளி மாணவி ஒருவர் பேருந்தில் ஏறினார். இந்த மாணவியிடம் சஜன் தவறான முறையில் நடந்து கொண்டதோடு கட்டாயப்படுத்தி முத்தம் கொடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி தனக்கு நடந்த சம்பவங்கள் குறித்து பள்ளிக்கு சென்ற பிறகு ஆசிரியர்களிடம் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மாணவியின் சகோதரர் உட்பட சிலர் சம்பந்தப்பட்ட பேருந்து நிறுத்தி சஜனை பிடித்தனர். பின்னர் அவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு சஜன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.