உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் வீடு மற்றும் இல்லங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலை திடீர் சோதனையில் நடத்தினர். ஏற்கனவே செந்தில் பாலாஜிக்கு எதிராக ரெய்டு நடத்தப்பட்டது மட்டுமில்லாமல் அவர் மீது கைது நடவடிக்கையும் பாய்ந்துள்ளது. தற்போது பொன்முடியை அமலாக்க துறையினர் குறி வைத்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் இந்த ரெய்டு நடவடிக்கை குறித்து திமுக தலைவர்கள் பலரும் விமர்சனங்களையும் கண்டனங்களையும் முன்வைத்து வருகின்றனர் .

அந்த வகையில் நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகனிடம் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு குறித்து கேள்வி கேட்டதற்கு, அவர் அப்படியா அவர் வீட்டில் ரெய்டு நடக்கிறதா? பொன்முடி வீட்டில் ப்ராமிஸாவா? எனக்கு தெரியாது. என்னன்னு பாத்துட்டு சாயங்காலமாக பதில் சொல்கிறேன் என்றார். அப்போது வேறொருவர்  இதை பழிவாங்கும் நடவடிக்கையாக பார்க்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு துரைமுருகன் என்னதான் நடக்கட்டும் நடக்கட்டுமே… இருட்டினில் நீதி மறையட்டுமே… என்று பழைய எம்ஜிஆர் பாடலை பாடி அங்கிருந்து காரில் கிளம்பியுள்ளார்.