ஆசியக் கோப்பையில் இந்தியாவின் வரலாற்று வெற்றிக்குப் பிறகு, விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா இருவரும் மும்பையில் தனது குடும்பத்தினருடன் கணேஷ் சதுர்த்தியைக் கொண்டாடினர்..

ஆசிய கோப்பை வெற்றிக்கு பின் இந்திய கிரிக்கெட் அணி வெள்ளிக்கிழமை தொடங்கும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஒருநாள் தொடருக்கு முன் ஒரு சிறிய இடைவெளியை அனுபவித்து வருகிறது. நட்சத்திர பேட்டர் விராட் கோலி ஆசிய கோப்பையின் ஒரு பகுதியாக இருந்தார். ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 ஒருநாள் போட்டிகளில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விராட் கோலி மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனின் மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மா விநாயக சதுர்த்தியை கொண்டாடி பூஜை செய்தனர்.  

 

இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் பிரபல ஜோடிகளில் ஒருவரான விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா தம்பதியர் இந்த ஆண்டு விநாயக சதுர்த்தியை தனித்துவமான மற்றும் சுற்றுச்சூழல் நட்பு முறையில் கொண்டாடினர், இது பலரின் இதயங்களைக் கவர்ந்துள்ளது. ஆசிய கோப்பை 2023 பட்டத்தை வென்ற பிறகு சமீபத்தில் இந்தியா திரும்பிய கணவர் விராட் கோலியுடன் வீட்டில் விநாயக சதுர்த்தி கொண்டாட்டங்களின் படத்தைப் பகிர்ந்து கொள்ள நடிகை அனுஷ்கா ஷர்மா இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுக்கு ‘விநாயக சதுர்த்தி’ வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர் வெளியிட்ட ஒரு படத்தில், அனுஷ்கா விநாயகர் சிலையின் படத்தைப் பகிர்ந்துள்ளார், இரண்டாவதாக, அவர் தனது கணவர் விராட் கோலியுடன் அழகாக போஸ் கொடுத்தார். அனுஷ்கா அழகான தங்க மற்றும் சிவப்பு நிற காஞ்சிபுரம் சேலையில் தன்னை அலங்கரித்து, நேர்த்தியை வெளிப்படுத்துகிறார். மேலும் நுட்பமான ஒப்பனையைத் தேர்ந்தெடுத்தார், வசீகரத்தையும் அழகையும் வெளிப்படுத்தினார். அதே நேரத்தில் விராட் கோலி வெள்ளை அச்சிடப்பட்ட குர்தா மற்றும் பைஜாமாவில் அழகாக தோற்றமளிக்கிறார். 3து படம் இருவரும் கொண்டாட்டத்திற்கான ஆயத்தங்களில் மூழ்கியிருப்பதைக் காட்டுகிறது. கமெண்டில் அனைவரும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால், அவர்களின் மகள் புகைப்படங்களில் தென்படவில்லை. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.