
கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியைச் சேர்ந்தவர் அனில் குமார் . இவர் கலா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கடந்த 2019 ஆம் வருடம் திடீரென்று கலா காணாமல் போய் உள்ளார் .அவர் வேறு ஒரு நபரோடு சென்றுவிட்டதாக அனில் குமார் கூறி வந்த நிலையில் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி புகார் தொடர் நடவடிக்கை இல்லாமல் கிடப்பில் போடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கலா காணாமல் போகவில்லை என்றும் கணவர் அனில் குமார்தான் கொலை செய்து வீட்டின் செப்டிக் டேங்கில் போட்டுள்ளதாகவும் போலீசாருக்கும் மொட்டை கடிதம் சென்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து அனில்குமாரின் வீட்டின் செப்டிக் டேங்க் காவல்துறையினர் சோதனை இட்டதில் உறுக்குளைந்த நிலையில் பெண்ணின் எலும்புக்கூடு கைப்பற்றப்பட்டுள்ளது .இந்த விசாரணையில் கொலைக்கு உடந்தையாக இருந்த 5 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பெண்ணின் கணவர் அனில் குமார் இஸ்ரேலில் இருப்பதால் அவரை கேரளா கொண்டுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. 15 வருடங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை போலீசார் கண்டறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.