சாய் நகர் ஸ்ரீரடி அதிவிரைவு ரயில் உள்ளிட்ட முக்கிய ரயில் சேவை நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி இன்று செப்டம்பர் 6 முதல் அக்டோபர் நான்காம் தேதி வரை பெங்களூரில் இருந்து புறப்படும் லால் பாக் விரைவு ரயில் காலை 6.20 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும் என்றும் கோவையிலிருந்து புறப்படும் இன்டெர்சிட்டி விரிவுரயில் காலை 6.20 மணிக்கு காட்பாடியுடன் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைப் போலவே சென்னை சென்ட்ரலில் இருந்து மைசூர் செல்லும் அதிவிரைவு ரயில் பிற்பகல் 1.35 மணிக்கு புறப்படும் என்றும் கோவைக்கு பிற்பகல் 2.35 மணிக்கு புறப்படும் இன்டெர்சிட்டி விரைவு ரயில் சென்ட்ரலில் இருந்து புறப்படுவதற்கு பதில் காட்பாடியில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை சென்ட்ரலுக்கு காலை 10.10 மணிக்கு வரும் விரைவு ரயில் அரக்கோணத்துடன் நிறுத்தப்படும் என்றும் சென்னை சென்ட்ரலில் இருந்து சாய் நகர் ஸ்ரீரடி செல்லும் அதிவிரைவு ரயில் 2 மணி நேரம் தாமதமாக பிற்பகல் 12.20 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.