கோடை விடுமுறையை முன்னிட்டு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக ஏப்ரல் 22ஆம் தேதி இன்று எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து இன்று பிற்பகல் 12.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் நள்ளிரவு 12.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

இந்த ரயில் எழும்பூரில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விருதாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர் மற்றும் கோவில்பட்டி வழியாக திருநெல்வேலி சென்றடையும். இந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.