சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கடந்த வருட மே மாதம் 28ஆம் தேதி எஸ்.வி கங்கா பூர்வாலா பதவி ஏற்றுக்கொண்டார். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஒரு வருடம் பணியாற்றிய நிலையில் நாளையுடன் அதாவது மே 23ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார்.

இதன் காரணமாக தற்போது சென்னை உயர் நீதிமன்றத்திற்கு பொறுப்பு தலைமை நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி ஜனாதிபதி திரௌபதி முர்மு ஆர். மகா தேவனை சென்னை உயர் நீதிமன்றம் தலைமை பொறுப்பு நீதிபதியாக நியமித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் மே 24ஆம் தேதி முதல் ஆர். மகாதேவன் தலைமை பொறுப்பு நீதிபதியாக தன்னுடைய பணிகளை கவனிப்பார் என்று கூறப்படுகிறது.