ஐரோப்பிய நாடுகளில் பிரபலமான டி10 போட்டிகளை போன்று இந்தியாவில் நடத்த பிசிசிஐ ஆர்வம் காட்டி வந்தது. இந்நிலையில் ஐஎஸ்பிஎல் என்ற பெயரில் டி10 போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதில் சென்னை, ஐதராபாத், பெங்களூரு, மும்பை, கொல்கத்தா மற்றும் ஸ்ரீநகர் ஆகிய 6 அணிகள் பங்குபெற உள்ளன. அடுத்த ஆண்டு மார்ச் 2ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகளை பிரபலங்கள் தற்போது வாங்கிவருகின்றனர். அந்த வகையில், சென்னை அணியை நடிகர் சூர்யா வாங்கியுள்ளார். இதை, அவரே, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.