ஐசிசி நடத்தும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அக்டோபர் ஐந்தாம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளது. அதாவது அக்டோபர் 8, 13, 18, 23, 27 ஆகிய தேதிகளில் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகின்றது. அதனைப் போலவே வாகனம் நிறுத்துமிட அனுமதி அட்டை இல்லாத கிரிக்கெட் ரசிகர்களின் வாகனங்கள் மெரினா கடற்கரையில் பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரே உள்ள வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.