அரசு பள்ளிகளில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு பள்ளி திறன் பயிற்சியை மாநில, மாவட்ட, வட்டார அளவில் வழங்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்ககம்  இணைந்து ஆசிரியர்களுக்கு பல்வேறு பணிகளை மேம்பாட்டு பயிற்சிகளை நடப்பு கல்வி ஆண்டுக்கு திட்டமிட்டு மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நடத்தி வரப்படும் சிஆர்சி பயிற்சி 6 முதல் 8ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியாக மாநில அளவில் அக்டோபர் 9, 10, மாவட்ட அளவில் அக்டோபர் 12, 13 ,,வட்டார அளவில் அக்டோபர் 6, 17, 18 ஆகிய தேதிகளில் நடத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.