
சென்னை புறநகர் மின்சார ரயில்கள் வழக்கம் போல இயக்கப்படும் என்று சென்னை ரயில்வே கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது வரை சென்னை கோட்டத்தின் புறநகர் ரயில் சேவைகள் ரத்து அல்லது மாற்றி அமைக்கப்படுவது என எதுவும் செய்யப்படவில்லை. அதே சமயம் ரயில் சேவை மாற்றம் குறித்த தகவல்களுக்கு தெற்கு ரயில்வேயின் சமூக ஊடகத்தில் பயணிகள் பார்த்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.