சென்னை சென்ட்ரலில் இருந்து செல்லும் விரைவு ரயில் சேவைகள் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில் டிசம்பர் 7 இன்று முதல் புறநகர் ரயில்கள் வழக்கம் போல இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் புயல் பாதிப்பால் ரயில் நிலையத்தை இணைக்கும் முக்கிய பாலத்தை வெள்ளம் சூழ்ந்ததால் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து விரைவு ரயில் மற்றும் புறநகர் ரயில் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டது.

பல ரயில்களும் அடுத்தடுத்த ரயில் நிலையங்களில் இருந்து புறப்பட்ட நிலையில் சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் செந்தூர் மற்றும் கொல்லம் விரைவு ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று முதல் சென்னை சென்ட்ரல் – அரக்கோணம், சென்னை கடற்கரை – செங்கல்பட்டு, சிந்தாதிரிப்பேட்டை மற்றும் வேளச்சேரி வழித்தடத்தில் மின்சார ரயில்கள் வழக்கம்போல இயக்கப்படும் எனவும் சூலூர் பேட்டை மற்றும் கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் திருவொற்றியூரில் இருந்து 30 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.