சென்னையில் கனமழை காரணமாக பல இடங்களிலும் நீர் தேங்கியுள்ளதால் இன்றும் மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் -அரக்கோணம், சென்னை சென்ட்ரல் -சூளூர்பேட்டை, சென்னை கடற்கரை -செங்கல்பட்டு இடையே அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக நேற்று மின்சார ரயில்கள் இயக்கப்படாத நிலையில் இன்றும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.