சென்னை கோடம்பாக்கம் மற்றும் தாம்பரம் ரயில் நிலையங்களுக்கிடையே பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மார்ச் 3ம் தேதி இன்று சென்னை கடற்கரையிலிருந்து காலை 10.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே தாம்பரத்தில் இருந்து காலை 10.05 மணி முதல் மாலை 4.30 மணி வரை சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்பட உள்ளது.

பராமரிப்பு பணிகள் காரணமாக நான்காவது வாரமாக சென்னை கடற்கரை மற்றும் செங்கல்பட்டு இடையே மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. இன்று விடுமுறை என்பதால் ரயில்கள் ரத்து செய்யப்படுவது மக்களை கடுமையான சிரமத்திற்கு ஆளாக்கியுள்ளது.