செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவல் பத்தாவது முறையாக நவம்பர் 22ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாமல் உள்ள ஆவணங்களை வழங்க கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு குறித்து ED பதில் அளிக்கவும் உத்தரவிட்டார். இன்னும் சற்று நேரத்தில் செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கு உச்சநீதிமன்றத்தில் வரவுள்ள நிலையில் அவரின் காவல் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.