தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம் தொடர்பாக ஆவடியில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழ்நாடு ஆளுநர் நிர்பந்தப்படுத்துவதற்காக செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருந்து விலக தேவையில்லை, அமைச்சர்களின் இலாகாவை மாற்ற முதல்வருக்கு மட்டுமே  அதிகாரம் உள்ளது. வழக்கு இருப்பதாலேயே ஒருவரை அமைச்சரவை பதவியில் இருந்து நீக்கத் தேவையில்லை.
எனவே செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருந்து விலக தேவையில்லை என்று தெரிவித்துள்ளார். செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர கூடாது என தமிழக ஆளுநர் தெரிவித்திருந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சபாநாயகர் அப்பாவு இவ்வாறு தெரிவித்துள்ளார்.