செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார். தன் கணவருக்கு எதிராக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெறுப்பை வளர்த்து வருவதாக மனுவில் குற்றச்சாட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைத்தது சட்டவிரோதமானது ஆகும். ஆகவே அவரை விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஆட் கொணர்வு மனுவை செந்தில் பாலாஜி மனைவி மேகலா தாக்கல் செய்த நிலையில், இப்போது தாக்கல் செய்துள்ள கூடுதல் மனுவில் தன் கணவருக்கு எதிராக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெறுப்பை வளர்த்து வருவதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.