சிறுத்தை, வீரம், விஸ்வாசம், அண்ணாத்த உட்பட பல்வேறு படங்களை இயக்கிய சிவா இயக்கும் திரைப்படத்தில் சூர்யா இப்போது நடித்து வருகிறார். சூர்யா 42 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனமானது இணைந்து தயாரிக்கின்றனர்.

இத்திரைப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகிபாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இந்த படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் சூட்டிங் மும்முரமாக நடந்து வருகிறது.

இந்தநிலையில் சூர்யா-42 திரைப்படத்தின் தலைப்பு பற்றி தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இந்த படத்துக்கு “வீர்” என தலைப்பு வைக்க படக்குழு திட்டமிட்டு இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கிறது.