விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். இதுவரையிலும் 8 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து 9-வது சீசன் அண்மையில் தொடங்கி இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. சூப்பர் சிங்கர் 9-வது சீசன் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்டமாக நடந்தது.

இறுதிப் போட்டியில் அபிஜித், அருணா, பூஜா, பிரியா ஜெர்சன், பிரசன்னா போன்றோர் கலந்துகொண்டனர். இந்த நிலையில் சீசன் 9 வின்னர் டைட்டிலை அருணா தட்டி சென்றுள்ளார். இதனால் அருணாவுக்கு ரூ.60 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே பிரியா ஜெர்சன் 2-வது இடமும், பிரசன்னா 3-வது இடமும் பிடித்தனர்.