
தமிழகம், புதுச்சேரியில் 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. இந்நிலையில், அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளும், அதிமுக தலைமையில் தேமுதிக, புதிய தமிழகம், எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகளும், பாஜக தலைமையில் ஐஜேகே, பாமக, தமமுக, புதிய நீதிக்கட்சி உள்ளிட்டவையும் களம் காண்கின்றன. அதே போல், இந்த முறையும் நாம் தமிழர் கட்சி தனித்து 40 தொகுதிகளிளும் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது. இதனால் இந்த தேர்தல் கடும் போட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.