கர்நாடக மாநிலத்தில் அரசு பள்ளியில் சூடான சாம்பார் பாத்திரத்தில் தவறி விழுந்த இரண்டாம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் அப்சல்பூர் தாலுகாவில் உள்ள பள்ளியில் நடந்த இந்த சம்பவத்தில் 40% காயமடைந்த அந்த சிறுமி பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து பணியில் அலட்சியமாக இருந்த மூன்று பள்ளி ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.