கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தன்பாத்திலிருந்து எர்ணாகுளத்தில் முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் 21ஆம் தேதி இன்று காலை 6 மணிக்கு தன்பாத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் நவம்பர் 23ஆம் தேதி காலை 10.30 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும். இந்த சிறப்புரையில் சேலம், ஈரோடு, கோவை வழியாக இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.