ஆந்திர மாநில மன்யம் மாவட்டத்தில் உள்ள பார்வதிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆதிமூலம் லக்ஷ்மணா. இவர் தனது மகளின் திருமணத்திற்காக சுமார் 2 லட்சம் ரூபாய் பணத்தை இரும்பு பெட்டி ஒன்றில் சேகரித்து வைத்திருந்தார். பணம் எவ்வளவு சேர்ந்து உள்ளது என்பதை தெரிந்து கொள்வதற்காக நேற்று இரும்பு பெட்டியை திறந்து பார்த்த ஆதி மூலம் அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. பெட்டியில் இருந்த பணம் கரையான் அரிக்கப்பட்டு மிகவும் சேதம் அடைந்து இருந்தது.

பணத்தை மொத்தமாக கீழே தட்டிப் பார்த்தவர் மொத்த பணத்தையும் கரையான் அரித்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இந்நிலையில் அறியாமையால் இரும்பு பெட்டியில் பணத்தை வைத்து நஷ்டம் அடைந்து விட்டேன் எனது மகளின் திருமணத்திற்கு எனது நிலையை கருத்தில் கொண்டு அரசு உதவி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.