தென் ஆப்பிரிக்காவின் வடக்கு மாகாணத்தில் ராணுவ பயிற்சி தளம் அமைந்துள்ளது. இங்கு அந்நாட்டின் ராணுவ வீரர்கள் வழக்கம் போல் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அப்பகுதிக்கு அடுத்துள்ள சுரங்கத்தில் திடீரென தீ பிடித்துள்ளது. அந்த தீ ராணுவ பயிற்சி தளத்திற்கும் வேகமாக பரவியுள்ளது. இதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் தீயில் சிக்கி எரிய தொடங்கியுள்ளது.

இந்த தீயை அணைக்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்ட நிலையில் 6 ராணுவ வீரர்கள் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் 3 ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு ராணுவ உயர் அதிகாரிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.