இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது. அதிலும் குறிப்பாக செல்ல பிராணிகள் மற்றும் விலங்குகள் குறித்த வீடியோக்கள் அதிகளவில் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் இதனை ரசிப்பதற்கு இணையத்தில் தனி ஒரு ரசிகர்கள் பட்டாலும் உள்ளது. இதில் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும் வகையிலும் இருக்கும்.

அதன்படி தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் மரத்தின் மீது புலி ஒன்று ஏறி படுத்து கொண்டிருக்கிறது. அதனைப் பார்த்த குரங்கு கிளைக்கிலையாக தாவித்தாவி புலிக்கு அருகே வந்து அதனிடம் வம்பு செய்கிறது. முதல் முறை வம்பு இழுத்து விட்டு அடுத்த கிளைக்கு தாவும் போது புலி பெரிதாக எதுவும் கண்டு கொள்ளவில்லை. ஆனால் மீண்டும் குரங்கு அதனை சீண்டும் நிலையில் புலிக்கு பயங்கர கோபம் வந்து குரங்கை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என ஆவேசத்தில் தாவுகின்றது. அப்போது குரங்கு திடீரென மற்றொரு கிளைக்கு தாவி சென்றுவிட புலி மரத்தின் உச்சியிலிருந்து கீழே விழுகின்றது. இந்த அளவில்லாத சேட்டையை குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.